Friday, March 26, 2010

நெற்பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை

மாவட்டம் புதுக்கோட்டை வட்டாரத்தில் நெற்பயிர் சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் படைப்புழுக்களின் தாக்குதலை கட்டுபடுத்தும் வழிறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நெற்பயிர் கதிர்வெளிவரும் நிலையிலும் பூக்கும் பருவத்திலும், பால்பிடிக்கும் பருவத்திலும், அறுவடை பருவத்திலும் உள்ளது. இத்தருணத்தில் நெற்பயிரில் ஆங்காங்கே படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனால் வயல் முழுவதும் கடும்பாதிப்புக்குள்ளாகும். ஒரு புழு 15 நாள் முதல் 24 நாட்கள் வாழும். இப்புழுக்கள் இளம் புழு பருவத்தில் பச்சை நிறத்திலும், வளர வளர பழுப்பு நிறத்திலும் ஓரங்களில் வெளிறிய கோடுகளும் இருக்கும். சில நேரங்களில் பச்சை நிறத்திலும் காணப்படும். எனவே கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மாலை வேலையில் ஒரு ஏக்கருக்கு எண்டோசல்பான் 300 மிலி அல்லது குளோர்பைரிபாஸ் 500 மிலி தெளிக்க வேண்டும். இவ்வாறு புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

0 comments:

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP